கடந்த சில நாட்களாக இந்திய பங்குச் சந்தையில் தொடர் ஏற்றம் பதிவாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் வரலாற்று உச்ச பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 302.3 புள்ளிகள் உயர்ந்து 67097.44 புள்ளிகள் ஆக உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 83.9 புள்ளிகள் உயர்ந்து 19833.15 புள்ளிகளாக உள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, என்டிபிசி, பஜாஜ் பைனான்ஸ், இண்டஸ் இன்ட் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ ஆகிய நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், ஹிந்தால்கோ, டிசிஎஸ், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப், இன்போசிஸ், ஐ சி ஐ சி ஐ வங்கி ஆகியவை இறக்கம் அடைந்துள்ளன.