இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தை உயர்வுடன் தொடங்கியது. இறுதியாக, இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 415 புள்ளிகள் உயர்ந்து, 60224 ஆக நிலை கொண்டது. கடந்த இரு வர்த்தக நாட்களில் மட்டுமே, சென்செக்ஸ் குறியீட்டு எண்ணில் 1300 புள்ளிகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 117 புள்ளிகள் உயர்ந்து, 17711 புள்ளிகளாக நிலை பெற்றது. கடந்த பிப்ரவரி 21ஆம் தேதிக்கு பின்னர், நிஃப்டி குறியீட்டு எண்ணில் 17,700ஐ தாண்டி புள்ளிகள் பதிவாகியுள்ளன.
இன்றைய வர்த்தக நாளில், டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, பவர் கிரிட், பஜாஜ் பின்சர்வ், ஏசியன் பெயிண்ட்ஸ், ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி ஆகிய நிறுவனங்கள் உயர்வை பதிவு செய்துள்ளன. அதே வேளை, டாடா ஸ்டீல், எல் அண்ட் டி, இண்டஸ்இண்டு வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்துள்ளன. மேலும், இன்றைய வர்த்தக நாளில், எரிவாயு, எரிசக்தி தொடர்பான நிறுவனங்கள் பெரும்பங்கு லாபத்தை ஈட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.