இந்திய பங்குச்சந்தை இன்று எழுச்சி அடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 418.45 புள்ளிகள் உயர்ந்து, 63143.56 புள்ளிகளாக நிலை கொண்டுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 114.65 புள்ளிகள் உயர்ந்து 18716.15 புள்ளிகளாக உள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, டாடா கன்சியூமர், சிப்லா, ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன், ஐடிசி, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், அதானி எண்டர்பிரைசஸ், மஹிந்திரா, எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், கோடக் வங்கி, எச் சி எல் டெக் ஆகிய நிறுவனங்கள் இறக்கமடைந்துள்ளன. இந்திய பங்குச் சந்தை, இன்று ஒரே நாளில் மிகுந்த ஏற்றத்தை பதிவு செய்துள்ளதால், முதலீட்டாளர்கள் 2.09 லட்சம் கோடி ரூபாய் மதிப்பளவில் லாபமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.