இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச்சந்தை 1% அளவுக்கு உயர்வை பதிவு செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 941.12 புள்ளிகள் உயர்ந்து 74671.28 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 223.46 புள்ளிகள் உயர்ந்து 22643.4 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, ஐசிஐசிஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கோட்டக் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், என்டிபிசி, டாடா ஸ்டீல் ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ஹெச் சி எல் டெக், அப்போலோ ஹாஸ்பிடல், பஜாஜ் ஆட்டோ, எச்டிஎஃப்சி லைஃப், எல் டி ஐ மைண்ட் ட்ரீ, ஹீரோ மோட்டோகார்ப், டேவிஸ் லேப்ஸ், ஐடிசி ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.