ஜெர்மனியில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பலர் பங்கேற்றுள்ளனர். மனு பாக்கர் முதல்சுற்றில் சிறப்பாக விளையாடினாலும், இறுதியில் பதக்கம் கைவசம் ஆகவில்லை.
ஜெர்மனியின் முனீச் நகரில் நடைபெறும் 3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 78 நாடுகளைச் சேர்ந்த 695 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்திய அணியில் 36 பேர் இருக்க, இவர்களில் ஒலிம்பிக் பதக்கவென்ற மனு பாக்கர், சரப்ஜோத் சிங் உள்ளிட்டோர் உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றார். 25 மீ. பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் முதல் சுற்றில் 5வது இடம் பிடித்தார். ஆனால் இறுதிப்போட்டியில் 6வது இடத்துக்கு தள்ளி பதக்கம் இழந்தார்.