ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் இந்திய ராணுவத்தின் பெண் வீராங்கனைகள் பங்கேற்பது குறித்து பெருமை கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஐ.நா. அமைதிப்படையில் உலகின் பெரும்பாலான நாட்டின் ஆண், பெண் வீரர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதையடுத்து சூடானின் அபெய் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் முழுவதும் பெண் வீராங்கனைகளை கொண்ட இந்திய அமைதி படையினர் பாதுகாப்பு சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ஐநாவின் அமைதி காக்கும் படையில் இந்தியா பங்களிப்பை வழங்குவது பாரம்பரியமாக உள்ளது. எங்களின் பெண் சக்தி இதில் பங்கேற்பது இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.