தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் பதிவாகி வருகிறது. இன்றைய வர்த்தக நாளின் இடையில் 0.5% வரை உயர்ந்த பங்குச் சந்தை புள்ளிகள், இறுதியில் 0.15% உயர்வை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 114.49 புள்ளிகள் உயர்ந்து 73852.94 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 34.41 புள்ளிகள் உயர்ந்து 22402.4 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், ஹிண்டால்கோ, சிப்லா, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், பவர் கிரிட், கோட்டக் வங்கி, அப்பல்லோ ஹாஸ்பிடல், ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, என்டிபிசி, ஓஎன்ஜிசி, சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், டாடா கன்சியூமர், கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ், டெக் மஹிந்திரா, எச்டிஎஃப்சி லைஃப், பஜாஜ் ஆட்டோ, டி சி எஸ், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.