கனடாவில் குராசிஸ் சிங் என்ற இந்திய மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான குராசிஸ் சிங், கனடாவின் லாம்ப்டன் கல்லூரியில் வணிக மேலாண்மை படித்து வந்தார். இவர், கனடாவின் சர்னியா பகுதியில், கிராஸ்லி ஹண்டர் (36) என்பவருடன் அறையில் தங்கியிருந்தார். சமையலறையில் ஏற்பட்ட தகராறில் கிராஸ்லி ஹண்டர், குராசிஸ் சிங்கை பலமுறை கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த குராசிஸ், சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் உடன் சம்பவ இடத்திற்கு வந்து, குராசிஸ் சிங்கின் உடலை மீட்டனர். கிராஸ்லி ஹண்டரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.