கனடாவில் குடியேற்ற விதிகள் மாற்றப்பட்டுள்ளதால் இந்திய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கனடாவில் பிரின்ஸ் எட்வர்ட் தீவு என்றும் மாகாணம் உள்ளது. இந்த மாகாணம் சமீபத்தில் குடியேற்ற விதிகளை மாற்றி உள்ளது. இந்தியாவை சேர்ந்த பல மாணவர்கள் கனடாவில் படித்து வருகிறார்கள். ஆண்டு தோறும் அங்கு சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குடியேற்ற விதிகள் மாற்றப்பட்டுள்ளதால் ஏராளமானவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக இந்திய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறும்போது, ஏராளமான இந்திய மாணவர்கள் கனடா சென்று படிக்கிறார்கள். ஆனால் ஏராளமான மாணவர்கள் இந்தியாவுக்கு திரும்பும் சூழ்நிலை எதிர்கொண்டு வருகின்றனர் என்ற எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஒரு சிலர் திரும்பும் சூழல் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அங்குள்ள மாணவர்கள் மிகப்பெரிய பிரச்சனையை எதிர்கொள்வதாக நாங்கள் நினைக்கவில்லை என்று கூறினார்.