கனடாவின் பிரதமர் பதவிக்கான போட்டியில் லிபரல் கட்சியின் எம்.பி. மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான சந்திரா ஆர்யா அதிகாரபூர்வமாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பிறந்த சந்திரா ஆர்யா, தற்போது கனடாவின் ஒட்டாவா மாகாண எம்.பி.யாக இருந்து வருகிறார். எக்ஸ் தளத்தில் அவர், "கனடா தனது தலைவிதியை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். நான் ஒரு சிறிய, திறமையான அரசாங்கத்தை வழிநடத்த விரும்புகிறேன்" என பதிவிட்டுள்ளார். சந்திரா ஆர்யா, தனது கன்னட மொழி பேசும் வீடியோ மூலம் அதிக கவனம் பெற்றார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆதரவாளர் ஆவார். தற்போது, கனடாவின் புதிய பிரதமர் பதவிக்கு அவர் மற்றும் முன்னாள் எம்.பி. பிராங்க் பெய்லிஸ் மட்டுமே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.