மரணத்தின் போது மருத்துவ உதவி பெறாதவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் இன்னும் அதிகமாக உள்ளது. இது சுகாதார அமைப்பின் குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது.
2022ஆம் ஆண்டில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் 50.7% பேர் மருத்துவ கவனிப்பின்றி உயிரிழந்துள்ளனர் என சிவில் பதிவு அமைப்பு தெரிவித்துள்ளது. 2021மாண்டுடன் ஒப்பிடும்போது 15.4% இறப்பு எண்ணிக்கை குறைந்தது, இது கோவிட்-19 தாக்கம் அதிகமாக இருந்த ஆண்டின் தாக்கமாக கருதப்படுகிறது. அதேசமயம், வெறும் 22.3% இறப்புகளுக்கே மருத்துவ ரீதியான காரணம் பதிவாகியுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான வேறுபாடுகளும் கவலையளிக்கின்றன. மேலும், 2022ஆம் ஆண்டில் சிசு மரண விகிதம் 1,000 உயிருள்ள பிறப்புகளுக்கு 7.54 ஆக குறைந்துள்ள போதும், சில மாநிலங்களில் இது இன்னும் அதிகமாகவே உள்ளது.