அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் இந்தியர்கள் மூன்றாம் இடத்தில் உள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.பி டபிள்யூ ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறி வரும் நாட்டினர் பட்டியலில் மெக்சிகோ முதலிடம் பிடித்துள்ளது. அதை தொடர்ந்து, எல் சால்வடார் இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த 2017 முதல் 2021 வரை, 9 லட்சம் மெக்சிகோ நாட்டினர் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். இதே காலகட்டத்தில், 8 லட்சம் எல் சால்வடார் நாட்டினரும், 7.25 லட்சம் இந்தியர்களும் அமெரிக்காவுக்குள் குடியேறியுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு மேலும் உயர்ந்துள்ளது. கடந்த 2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரை, 96917 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். இது 2019 - 2020 காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 5 மடங்கு உயர்வாகும்.