சிரியாவில் புதிய கிளர்ச்சி வெடித்தது இதில் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா நாட்டில் 2011 முதல் நடைபெற்ற உள்நாட்டு போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரம் கிளர்ச்சியாளர்கள் அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளைக் கைப்பற்றினர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து தப்பியோடினார்கள். இந்த நிலையில், இந்தியா சிரியாவுக்கான பயணங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. மத்திய வெளிவிவகார அமைச்சகம், சிரியாவுக்கான பயணங்களை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கி, அவசர உதவி எண்ணும் மின்னஞ்சல் முகவரியையும் வெளியிட்டுள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள், சிரியாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக உறுதியளித்துள்ளன. டமாஸ்கஸ் நகரில் இந்திய தூதரகம் செயற்பட்டு, இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.