உக்ரைனில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் கடந்த பிப்ரவரி முதல் நீடித்து வருகிறது. தொடர்ந்து, உக்ரைன் மீதான தாக்குலை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதுகுறித்து இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதை கருத்தில் கொண்டும் , உக்ரைனில் சமீப நாட்களாக அதிகரித்து வரும் ரஷ்ய தாக்குதல் காரணமாகவும், இந்தியாவை சேர்ந்தவர்கள் உக்ரைனுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தற்போது உக்ரைனில் உள்ள மாணவர்கள் உட்பட இந்திய குடிமக்கள் விரைவில் உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.