சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்தியாவின் நேரடி பணப் பரிமாற்றத் திட்டம் மற்றும் பிற சமூக நலத் திட்டங்களை 'தளவாட அற்புதம்' என்று பாராட்டுகிறது.
புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய IMF அதிகாரி மௌரோ, "இந்திய சமூக நலத் திட்டங்கள் உண்மையில் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைவதால் அவை ஈர்க்கக்கூடியவை. உலகெங்கிலிருந்தும், ஒவ்வொரு வருமான மட்டத்திலிருந்தும் எங்களிடம் உதாரணங்கள் உள்ளன. நேரடி பணப் பரிமாற்றத் திட்டம் இந்திய அரசாங்கத்தால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறைந்த வருமானத்தில் உள்ள மக்களுக்கு உதவும் இந்த திட்டங்கள் உண்மையில் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களை எப்படி சென்றடைகிறது என்பது ஒரு தளவாட அற்புதம்தான். இதுபோல் இந்தியாவில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது ”என்று பாராட்டினார்.
இந்தியா குறிப்பாக பெண்களை குறிவைத்து திட்டங்களை பதிவு செய்துள்ளதாகவும், முதியவர்கள் மற்றும் விவசாயிகளுக்கான திட்டங்கள் இருப்பதாகவும் மௌரோ குறிப்பிட்டார். இந்த திட்டங்களில், நிறைய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் ஆதார் திட்டத்தை கோடிட்டுக் காட்டினார்.
"மற்ற நாடுகளில், மொபைல் பேங்கிங் மூலம் பணம் அனுப்புவது அதிக பயன் உள்ளதாக இருக்கிறது. உண்மையில் நிறைய பணம் இல்லை, ஆனால் அவர்களிடம் செல்போன் உள்ளது. எனவே, மக்களை அடையாளம் காண்பதில், டிஜிட்டல் முறைகள் மூலம் பணப் பரிமாற்றங்களுக்கான விண்ணப்பங்களைச் செயலாக்குவதில், மீண்டும் மொபைல் பேங்கிங் மூலம் நிதியைப் பயன்படுத்துவதில் புதுமையானது இந்தியாவின் திட்டம். இது நாடுகள் ஒன்றுக்கொன்று கற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று. இந்த வகையான அனுபவங்களை மக்கள் ஒப்பிடக்கூடிய ஒரு சிறிய இடமாக இருக்க நாங்கள் இங்கு முயற்சிக்கிறோம், ” என்று அவர் கூறினார்.
மறுபுறம், IMF இன் நிதி விவகாரத் துறையின் இயக்குநர், IMF புதிய தொழில்நுட்பங்களில் இந்தியாவுடன் ஒத்துழைத்து வருவதாகவும் கூறினார்.