இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-எஸ் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்திய விண்வெளித்துறையில் முதன்முறையாக தனியார் வடிவமைத்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டானது 2 இந்திய செயற்கை கோள்கள் உட்பட 3 செயற்கை கோள்களை சுமந்து சென்றது.
இந்த ராக்கெட் 5 நிமிடங்களில் அதிகபட்ச உயரமான 81 கிலோமீட்டர் உயரத்தை அடைந்த பின்பு 3 செயற்கைகோள்களையும் விண்ணிலே அதனுடைய புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்த உள்ளது. தேசிய விண்வெளி வளர்ச்சி அங்கீகார மையத்தின் ஒப்புதலால் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவப்பட்டது.