இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-எஸ் நவ.12 - 16 தேதிகளுக்கு இடையே விண்ணில் செலுத்தபட இருக்கிறது.
கடந்த 2020-ம் ஆண்டு விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனம் பெரும் முயற்சிக்கு பிறகு விக்ரம்-எஸ் ராக்கெட் ஒன்றை வடிவமைத்திருக்கிறது. இந்த ராக்கெட் வருகின்ற 12-ம் தேதி முதல் 16-ம் தேதிக்குள் விண்ணில் செலுத்த நிறுவனம் திட்டமிட் டிருக்கிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விக்ரம்-எஸ் விண்ணுக்கு ஏவப்பட உள்ளது. இந்த ராக்கெட் மூலமாக செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக விண்வெளிக்கு ராக்கெட் ஏவிய முதலாவது இந்திய தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் பெறுகிறது.