தமிழ்நாட்டில் இருந்து ஏவப்படுகிறது இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைபிரிட் ராக்கெட்

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைபிரிட் ராக்கெட்டை சென்னை தலைமையகமாக கொண்ட ஸ்பேஸ் ஜோன் இந்தியா என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் ஏவுகிறது. வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள TTDC மைதானத்தில் இருந்து ராக்கெட் தேவைப்படுகிறது. "மிஷன் ரூமி -2024" என்று பெயரிடப்பட்ட இந்த ராக்கெட், முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை வழிகாட்டுதலுடன் செயற்கை கோள்களை நிறுவுகிறது. வளிமண்டல நிலைகளை கண்காணிக்க, துணை சுற்றுப்பாதையில் 3 கியூப சாட் செயற்கைக்கோள்கள் […]

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைபிரிட் ராக்கெட்டை சென்னை தலைமையகமாக கொண்ட ஸ்பேஸ் ஜோன் இந்தியா என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் ஏவுகிறது. வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள TTDC மைதானத்தில் இருந்து ராக்கெட் தேவைப்படுகிறது.

"மிஷன் ரூமி -2024" என்று பெயரிடப்பட்ட இந்த ராக்கெட், முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை வழிகாட்டுதலுடன் செயற்கை கோள்களை நிறுவுகிறது. வளிமண்டல நிலைகளை கண்காணிக்க, துணை சுற்றுப்பாதையில் 3 கியூப சாட் செயற்கைக்கோள்கள் மற்றும் 50 PICO செயற்கைக்கோள்கள் ஆகியவை நிறுவப்படுகின்றன. செமி கிரையோஜெனிக் நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் சாலிட் வேக்ஸ் எரிபொருளைப் பயன்படுத்தும் இந்த ஹைபிரிட் ராக்கெட், அதிகரித்த பாதுகாப்பு மற்றும் மறுபயன்பாடு ஆகியவற்றை நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் 80 கிலோகிராம் கூறுகளில் 70% மீட்டெடுக்கக்கூடியது. கோயம்பத்தூரின் மார்டின் குழுமத்தின் நிதியில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் 5,000 மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu