இந்தியாவில் முதல்முறையாக திடக்கழிவுகளில் இருந்து ஹைட்ரஜன் தயாரிப்பு

February 15, 2023

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில், இந்தியாவிலேயே முதல்முறையாக, திடக்கழிவுகளில் இருந்து ஹைட்ரஜன் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக, 'தி கிரீன் பில்லியன்ஸ்' என்ற நிறுவனம், புனே நகர் மாநகராட்சியுடன் இணைந்து 30 ஆண்டுகால ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. இதன்படி, நாள் ஒன்றுக்கு 350 டன் திடக்கழிவுகள் கையாளப்பட்டு, 10 டன் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி கழிவுகளில் இருந்து ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் திட்டம் குறித்து, ஏற்கனவே, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் […]

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில், இந்தியாவிலேயே முதல்முறையாக, திடக்கழிவுகளில் இருந்து ஹைட்ரஜன் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக, 'தி கிரீன் பில்லியன்ஸ்' என்ற நிறுவனம், புனே நகர் மாநகராட்சியுடன் இணைந்து 30 ஆண்டுகால ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. இதன்படி, நாள் ஒன்றுக்கு 350 டன் திடக்கழிவுகள் கையாளப்பட்டு, 10 டன் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி கழிவுகளில் இருந்து ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் திட்டம் குறித்து, ஏற்கனவே, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் தொடர்பாக, தி கிரீன் பில்லியன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பிரதீப் கனாகியா, "திடக்கழிவுகளில் இருந்து ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் ஆலை சுமார் 350 கோடி மதிப்பில் நிறுவப்பட உள்ளது. பிளாஸ்மா வளிமயமாக்கல் தொழில்நுட்பத்தில் செயல்படும் இந்த ஆலை, அடுத்த ஆண்டு முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும். ஒரு டன் திடக்கழிவை சுத்திகரிப்பு செய்ய, மாநகராட்சியிடம் இருந்து 347 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும், தயாரிக்கப்படும் ஹைட்ரஜன், 82 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் புதிய சேமிப்பகத்தில் இருப்பு வைக்கப்படும்" என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu