பசுமை வளர்ச்சி, வேலைவாய்ப்பில்தான் தற்போது இந்தியாவின் கவனம் உள்ளது - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.

September 24, 2022

பசுமை வளர்ச்சி, பசுமை வேலைவாய்ப்பை உருவாக்குவதில்தான் தற்போது இந்தியாவின் கவனம் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெற்ற மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களின் மாநாட்டை தொடங்கி வைத்த அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: மாநிலங்களுக்குள்ளான வட்டாரப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க அனைத்து சுற்றுச்சூழல் அமைச்சர் களும் முடிந்தவரையில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பசுமை வளர்ச்சி, பசுமை வேலை வாய்ப்புகளை நோக்கி நாடு நகர்ந்து வருகிறது. திடக்கழிவு மேலாண்மை பிரச்சாரத்தை நாம் வலுவாக முன்னெடுத்துச் […]

பசுமை வளர்ச்சி, பசுமை வேலைவாய்ப்பை உருவாக்குவதில்தான் தற்போது இந்தியாவின் கவனம் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெற்ற மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களின் மாநாட்டை தொடங்கி வைத்த அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: மாநிலங்களுக்குள்ளான வட்டாரப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க அனைத்து சுற்றுச்சூழல் அமைச்சர் களும் முடிந்தவரையில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பசுமை வளர்ச்சி, பசுமை வேலை வாய்ப்புகளை நோக்கி நாடு நகர்ந்து வருகிறது. திடக்கழிவு மேலாண்மை பிரச்சாரத்தை நாம் வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அது, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பிடியிலிருந்து நம்மை விடுவிக்கும். சுற்றுச் சூழல் அமைச்சகங்களின் செயல்பாடு கட்டுப்படுத்தப்பட்ட வரையறைக்குள் இருக்கக் கூடாது.

பழைய வாகனங்களை அகற்றும் கொள்கை, எத்தனால் கலந்த பயோஎரிபொருள் கொள்கைகளை மாநிலங்கள் முன்னெடுத்துச் செல்வது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அடிப்படையானதாக அமையும்.
இதுபோன்ற திட்டங்களை ஊக்குவிப்பது மாநிலங்களுக்கிடையில் ஒத்துழைப்பாகவும், ஆரோக்கியமான போட்டியாகவும் மாற வேண்டும். 2070-க்குள் கார்பன் உமிழ்வை பூஜ்யமாக்க வேண்டும் என்பதே இந்தியாவின் இலக்கு. இந்த இலக்கை அடைவதில் மாநிலங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu