இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு, தொடர்ந்து 3 வாரங்களாக உயர்ந்து வருகிறது. நவம்பர் 25 ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 2.89 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்து, 550.14 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி, தனது அறிக்கையில் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.
நவம்பர் 25 ஆம் தேதி நிலவரப்படி, வெளிநாட்டு நாணய மதிப்பு 3 பில்லியன் டாலர்கள் உயர்ந்து, 487.29 பில்லியன் டாலர்களாக பதிவாகியுள்ளது. தேசத்தின் மொத்த தங்க இருப்பு 73 மில்லியன் டாலர்கள் குறைந்து, 39.94 பில்லியன் டாலர்களாக உள்ளது. மேலும், நவம்பர் 18 ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், அந்நிய செலாவணி கையிருப்பு, 18 மாத உயர்வை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.