இந்தியாவின் ஆபரணத் துறை கடந்த சில ஆண்டுகளாக கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த 2024 ஆம் நிதியாண்டில், இந்தியாவின் சில்லறை ஆபரணத் துறை மதிப்பு 80 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த 2018 ஆம் நிதி ஆண்டில், 50 பில்லியன் டாலர்கள் அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.
மோதிலால் ஓஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் சில்லறை ஆபரணத் துறை வளர்ச்சிக்கு பல காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக, ஹால்மார்க் முத்திரையை அரசாங்கம் கட்டாயமாக்கியது ஆபரணங்கள் வாங்கும் போக்கை அதிகரித்ததாக சொல்லப்பட்டுள்ளது. அத்துடன், “இந்தியாவைப் பொறுத்தவரை, 36 முதல் 38% ஆபரண விற்பனையாளர்கள் மட்டுமே பெரிய வர்த்தகர்கள். எஞ்சியுள்ள விற்பனை, உள்ளூர் தங்க ஆசாரிகள் மற்றும் சிறிய அளவிலான நகை கடைகள் மூலம் நடைபெறுகிறது” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்த தங்க விற்பனையில் 66% நகைகள் ஆகவும், 34% கட்டிகள் மற்றும் நாணயங்களாகவும் விற்பனையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.