இந்தியாவின் முன்னணி டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் ஓய்வு பெறுகிறார்.
இந்தியாவின் முன்னணி டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமல், இந்த மாதம் சென்னையில் நடைபெறும் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 42 வயதான சரத், ஐந்து முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றும், ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார்.
காமன்வெல்த் போட்டிகளில் ஏழு பதக்கங்களை வென்ற இவர், ஆசிய போட்டிகளில் இரண்டு வெண்கல பதக்கங்கள் மற்றும் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் 4 பதக்கங்களையும் வென்றுள்ளார். தற்பொழுது 42-வது இடத்தில் இருப்பதுடன், தனது முதல் சர்வதேச போட்டி தொடங்கிய சென்னையிலேயே கடைசியாக விளையாடவுள்ளார்.














