பிரதமர் மோடி உக்ரைனுக்கு வரும் வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்திய பிரதமர் மோடி ஆகஸ்ட் 23ஆம் தேதி உக்ரைன் செல்ல இருக்கிறார். இது குறித்து வெளியுறவு அமைச்சகச் செயலர் தன்மையா லால் கூறுகையில், உக்ரைன் - இந்தியா உறவை வலுப்படுத்த இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். இந்த சந்திப்பின்போது ரஷ்யா உக்ரைன் போர் குறித்து விவாதிக்கப்படும். இந்தியா ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் சுதந்திரமான உறவை கொண்டுள்ளது. ரஷ்ய போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றார். உக்ரைன் பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி போலந்து நாட்டுக்கு செல்கிறார்.