இந்தியா தற்போது விண்வெளி துறையில் சாதனை படைத்து வருகிறது. அடுத்த கட்டமாக ஆழ்கடலில் ரகசியங்களை ஆராயும் முயற்சியிலும் சோதனை நடத்தி வருகின்றது. அந்த வகையில் மத்ஷ்யா 6000 என்ற நீர் மூழ்கி கப்பலை புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது 6000 மீட்டர் ஆழத்திற்கு மூன்று ஆய்வாளர்களை ஏற்றி செல்லும் வடிவில் இவை அமைக்கப்பட்டுள்ளது . கடலில் வளங்களை ஆய்வு இதன் முக்கியத்துவம் நோக்கம் என தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த நீர்மூழ்கி கப்பல் 2.1 மீட்டர் விட்டம் மற்றும் 600 பார் அழுத்தத்தை தாங்கக்கூடிய 22 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட டைட்டானியம் மூலம் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சோதனை இந்தியாவின் முதல் மனித கடல் ஆய்வு பணியாக இருக்கும் இந்த ஆய்வுகளால் கடல் வாழ் உயிரினங்களுக்கும், கடல் வாழ்விடத்தையும் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வாழ்வாதார மற்றும் வேலைவாய்ப்பு மேம்படுவதற்கும் கடல் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு மற்றும் பயன்படுத்துவது ஆகியவையே இதன் முக்கிய நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.