சீன மாஸ்டர் பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஆண்கள் இரட்டையர் ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.
சீனாவில் மாஸ்டர் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷின்ஷேன் நகரில் நடைபெற்று வருகிறது. அதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் கால் இறுதி ஆட்டத்தில் சாத்விக் சாய்ராஜ் - சிராக் இந்திய ஜோடி இந்தோனேசியாவை எதிர்கொண்டது. இதில் 21-15 மற்றும் 21- 16 என்ற கணக்கில் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. அரையிறுதி போட்டியில் இந்திய ஜோடி சீன ஜோடியை எதிர்கொள்ள உள்ளது.