கடந்த 2022 ஆம் ஆண்டில், இந்தியாவிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு வெளியேறும் ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கையில் 6% சரிவு பதிவாகியுள்ளது.
ஒட்டுமொத்தமாக, கடந்த ஆண்டில் ஷாவ்மி நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான கைப்பேசிகளை இந்தியாவிலிருந்து கொண்டு சென்றுள்ளது. மேலும், கடந்த காலாண்டை பொறுத்தவரை சாம்சங் நிறுவனம் விற்பனையில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தை பற்றி வல்லுநர்கள் கூறுவதாவது: "கொரோனா பரவலின் போது வீட்டில் இருந்தே பணி செய்யும் சூழல் ஏற்பட்டதால் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கைப்பேசிகளை மக்கள் அதிகமாக வாங்கினர். எனவே, அதன் தொடர்ச்சியான 2022ல், புதிய கைபேசிகளை வாங்கும் போக்கு குறைந்தது. 2023 ஆம் ஆண்டில் இந்திய மக்கள் 5ஜி தொழில்நுட்பத்திற்கு மாறுவதற்காக புதிய கைபேசிகளை வாங்குவர். எனவே, ஸ்மார்ட் போன் சந்தை நடுத்தரமான உயர்வை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.