புதுடெல்லி, ஏப்ரல் 28, 2022:
இந்தியச் சந்தையில், ஜியோமி நிறுவனம், தனது முதல் OLED டிவியை அறிமுகப்படுத்துகிறது. ஜிஎஸ்எம் அரேனா தகவலின்படி, 55 இன்ச் திரையளவு கொண்ட, இந்தப் புதிய மாடல் டிவியில், 3840 X 2160 OLED பேனல் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், இதில் 60 ஹெர்ட்ஸ் அளவிலான புதுப்பிப்பு விகிதமும், 10 பிட் அளவிலான சுய அமைப்பு பேனலும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், இந்தத் தொலைக்காட்சி, சுற்றுப்புற வெளிச்சத்திற்கு ஏற்றவகையில் தனது ஒளிர்வை சுயமாக மாற்றியமைக்கும் Dolby Vision IQ திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. மேலும், HDR10+, HDR10 மற்றும் HLG போன்ற தேர்வுகளும், 98.5% DCI-P3 கவரேஜும் உள்ளது. இந்த தொலைக்காட்சிக்கு, IMAX enhanced certification இருப்பது தனிச்சிறப்பாகும். இதனால், இது 30W ஒலித்திறன் அமைப்பில், Dolby Atmos மற்றும் DTS X ஒலிகளில் இயங்கும் திறன் கொண்டது என்று தெரிய வருகிறது. மே 19 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த தொலைக்காட்சியின் விலை 89999 ரூபாய் என்று ஜிஎஸ்எம் அரேனா கூறுகிறது.