தனியார் விமான நிறுவனம் ஆன இண்டிகோ விமான கட்டணங்களை அதிகரிக்க உள்ளது.
தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றாக உள்ள இண்டிகோ விமான போக்குவரத்து நிறுவனம் அதிக விமானங்களை இந்தியாவில் இயக்கி வருகிறது. இதில் 60% இந்திய பயணிகள் இண்டிகோ விமான செயலியை பயன்படுத்துகிறார்கள்.இது மற்ற விமானங்களை ஒப்பிடுகையில் கட்டணம் குறிப்பிட்ட கால அளவில் முன்பதிவு செய்தால் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யலாம் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது இந்நிறுவனம் தனது கட்டணத்தை அதிரடியாக உயர்த்த உள்ளது. இதில் பெரிய விமானங்களில் முன் இருக்கைகள் மற்றும் ஜன்னலோர இருக்கைகளை விரும்புவர்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலையை இந்த நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வர உள்ளது. அதன்படி முன் இருக்கைகளை தேர்வு செய்பவர்கள் கூடுதல் கட்டணமாக 2000 ரூபாய் செலுத்த வேண்டும். ஜன்னல் ஓர இருக்கைகள் தேர்வு செய்பவர்கள் கூடுதலாக 1500 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனம் குட்டி விமானங்களையும் இயக்கி வருகிறது. அந்த விமானங்களில் கட்டண உயர்வு மாற்றம் செய்யப்பட இருக்கிறதா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.














