ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் விலைகள் குறைந்துள்ளதால் இண்டிகோ நிறுவனம் கட்டணத்திலிருந்து எரிபொருள் கட்டணத்தை நீக்கியுள்ளது.
ஏ டி எஃப் எனப்படும் ஏவிகேசன் டர்பைன் எரிபொருள் விலைகள் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் அதிகரித்ததால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான கட்டணங்களில் டிக்கெட் விலை ரூபாய் 300 முதல் 1000 வரை உயர்ந்தது. தற்போது சமீபத்திய விலை குறைப்பின் காரணமாக எரிபொருள் கட்டணம் நீக்கப்பட்டுள்ளது. மேலும் ஏ டி எப் விலைகளின் மாற்றுத்தன்மையை கருத்தில் கொண்டு விமானங்களில் கட்டணங்கள் அவ்வப்போது மாற்றி அமைக்கப்படுகின்றன என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விலை குறைப்பு சர்வதேச மற்றும் உள்நாட்டு சேவைகளில் இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான கட்டணங்களில் எண்ணிக்கை ரூபாய் 300 முதல் 1000 வரை குறையும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.














