இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 28 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 28 பேர் உயிரிழந்தனர். இந்த தீவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்குடன் எரிமலை சாம்பல் பரவியது. இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வெள்ளப் பெருக்கால் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. நான்கு பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. வரும் நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது தேசிய பேரிடர் குழுவினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.