இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய அணி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இன்று ஜகார்த்தாவில் தொடங்கியது, இதில் இந்தியாவின் சிந்து, மாளவிகா, பிரணாய், லக்ஷயா சென் போன்ற நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் செட்டி ஜோடி, சீன தைபே அணியின் சென் ஸி ரே-லின் யூ சீஹ் ஜோடியை எதிர்கொண்டு 21-16, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறின.