இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள மரபி எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டது. இதில் சுமார் 23 பேர் பலியாகினர்.
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள மரபி எரிமலை கடந்த ஞாயிறன்று வெடித்தது. இதில் 23 பேர் பலியாகி உள்ளனர். இதில் பலரை காணவில்லை. இந்த எரிமலை சீற்றத்தில் சிக்கியவர்களை மீட்க மீட்பு படையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து அதிக அளவில் எரிமலை சாம்பல் மற்றும் புகை அதிலிருந்து வெளியாகி வருகிறது. இந்த வெடிப்பை தொடர்ந்து சாலைகள் மற்றும் கார்களை குப்பை மூடியுள்ளது. தொடர்ந்து இந்த எரிமலையில் இருந்து புகை மற்றும் சாம்பல் வெளிவந்து கொண்டிருக்கிறது.