சமூக வலைத்தளம் மூலமாக நடைபெறும் பொருட்கள் வர்த்தகத்துக்கு இந்தோனேசியா தடை விதிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் வர்த்தகத் துறை இணை அமைச்சர் ஜெர்ரி சாம்புகா இந்த தகவலை தெரிவித்துள்ளார்."சமூக வலைதளமும் சமூக நிலை வர்த்தகமும் எந்த புள்ளியிலும் இணைந்து பணியாற்ற முடியாது" என சாம்புகா தெரிவித்துள்ளார். மேலும், "இணைய வர்த்தகம் என்பது வேறு. ஆனால், இணைய வர்த்தகத்தில் ஈடுபடும் விற்பனையாளர்கள், சமூக வலைதளத்தில் தங்கள் பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு விளம்பரம் செய்கின்றனர். இதனால், வெளிச்சந்தையில் ஈடுபடுவோருக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. இதன் மூலம், கிழக்கு ஆசிய நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிப்படைய உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, இந்தோனேசியாவில் சமூக வலைதளம் மூலமாக வர்த்தகத்தில் ஈடுபட விரைவில் தடை விதிக்கப்படும்" என கூறியுள்ளார். ஆனால், "சமூக வலைதளத்தையும் இணைய வர்த்தகத்தையும் இரண்டு வெவ்வேறு துறைகளாக பிரிப்பதால், உண்மையில் விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருவருமே பாதிப்பை சந்திப்பர். மேலும், புதுமையான படைப்புகளுக்கு வரவேற்பு இல்லாமல் போகும் நிலை உண்டாகும்" என மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.