இந்தோனேசியாவில் மீண்டும் ரியாங் தீவில் உள்ள எரிமலை வெடித்ததால் சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டன.
இந்தோனேஷியாவில் உள்ள வடக்கு சுலவெசி மாகாணத்தில் ரியாங் தீவு உள்ளது. இந்த தீவில் உள்ள எரிமலை கடந்த மாதம் வெடித்து சிதறியது. பின்னர் கடந்த சில நாட்களாக அது அமைதியானது. இந்நிலையில், அந்த எரிமலை மீண்டும் வெடித்து சிதற தொடங்கியுள்ளது, இதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த எரிமலையின் அடிவாரத்தில் குடியிருந்த 12000 மக்கள் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது எரிமலை வெடிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதோடு சுற்றுலாப் பயணிகளின் வருகையை தவிர்க்கும் விதமாக சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. சாம் ரதுலங்கி உட்பட ஏழு விமான நிலையங்கள் மூடப்பட்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது.