கடந்த 2021 ஆம் ஆண்டு இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது இலங்கையில் பண வீக்கம் குறைந்துள்ளது.
இலங்கையில் ராஜபக்சே ஆட்சியில் இருந்த காலத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையால் மக்கள் பெரும் அவதி அடைந்தனர். அதனை தொடர்ந்து மக்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். ராஜபக்சே ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலகினார். பின்னர் ரணில் விக்ரமசிங்கே புதிய அதிபராக பொறுப்பேற்றார். இவர் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இந்நிலையில் இலங்கைக்கு இந்தியா பல உதவிகளை செய்து வந்தது. தற்போது இரண்டு வருடங்களுக்குப் பிறகு பணவீக்கம் குறைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணவீக்கம் 5.8 சதவீதமாக இருந்த நிலையில் கடந்த ஆண்டு 69.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.














