பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. அண்மை காலமாக, தொடர்ந்து உயர்ந்து வரும் பாகிஸ்தானின் பணவீக்கம், மே மாதத்தில் 38% ஆக உயர்ந்துள்ளது. எனவே, உணவுப் பொருட்கள், மின்சாரம், எரிவாயு, போக்குவரத்து, வீட்டு வாடகை உள்ளிட்ட பல்வேறு சேவைகளின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் கிராமப்புற பண வீக்கம் 52.4% ஆகவும், நகர்ப்புற பணவீக்கம் 8.1% ஆகவும் பதிவாகியுள்ளது. ஏப்ரல் மாதத்தை விட மே மாதத்தில், பணவீக்கம் 1.6% உயர்ந்துள்ள நிலையில், ஜூன் மாதத்தில் பணவீக்கம் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையை விட, பாகிஸ்தானின் பணவீக்கம் உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. எனவே, பணவீக்கத்தை குறைக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.