தகவல் பாதுகாப்பு மசோதா விரைவில் தயாராகிவிடும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் மத்திய அரசு தாக்கல் செய்த 'தகவல் பாதுகாப்பு சட்டம் 2019 ' சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற்று கொண்டது. இந்த சட்டத்தில் பார்லிமென்ட் நிலைக்குழு திருத்தங்கள் அளித்துள்ளது. இதனால் சட்டத்தை திரும்ப பெற்று கொள்வதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி கூறியிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க வர்த்தக கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், தகவல் பாதுகாப்பு சட்டம் விரைவில் தயார் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். மசோதா குறித்து அனைவரின் கருத்துகளும் பெறப்பட்டு வருகிறது. மேலும் பழைய மசோதாவில் கூறப்பட்ட திருத்தங்களும் நிறைவேற்றப்படும். மசோதா குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பணியாற்றி வருவதாகவும் கூறினார்.