இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ், அமெரிக்க குடியேற்ற விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு, அமெரிக்காவில் ரூ.238 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனம், தனது ஊழியர்களுக்கு H-1B தொழில் விசா வழங்காமல், B-1 பார்வையாளர் விசாவை தவறாக பயன்படுத்தி வருவதாக அமெரிக்க குடிவரவுத்துறை கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம், ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்துள்ளது. இந்த சம்பவம், வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என இளைஞர்களை ஊக்குவித்த நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம், லாபத்திற்காக சட்டத்தை மீறியது எனும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.