கடந்த வாரத்தில் ஐநாக்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ வெளியானது. இன்று, முதல் முறையாக, பங்குச் சந்தையில் ஐநாக்ஸ் இந்தியா பட்டியலிடப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 14 முதல் 18 வரை, ஐநாக்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஐபிஓ நிகழ்ந்தது. டிசம்பர் 19ஆம் தேதி, பங்கு ஒதுக்கீடு நிறைவடைந்தது. கிட்டத்தட்ட 61 மடங்கு கூடுதலாக ஐநாக்ஸ் பங்குகள் விற்றன. ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் மற்றும் ஆக்ஸஸ் கேப்பிட்டல் ஆகிய நிறுவனங்கள் இந்த ஒதுக்கீட்டில் முக்கிய பங்காற்றி உள்ளன. இந்த நிலையில், ஐநாக்ஸ் இந்தியா, அறிமுக விலையை விட 41% உயர்வான விலைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ஐபிஓ அறிமுகத்தின் போது ஒரு பங்கு மதிப்பு 660 ஆக இருந்த நிலையில், இன்று, ஒரு பங்கு 933 ரூபாயாக உள்ளது. மேலும், இன்றைய வர்த்தகத்தில் 978 ரூபாய் வரை பங்கு மதிப்பு உயர்ந்தது.