இனி இன்ஸ்டாகிராமில் அரசியல் பதிவுகள் பரிந்துரைக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
பயனர்களுக்கு இனி அளவுக்கு அதிகமான அரசியல் பதிவுகளை பரிந்துரைக்காது என்று இன்ஸ்டாகிராம் கூறியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ், எக்ஸ்ப்ளோர் போன்ற வசதிகளில் நாம் பின் தொடராத கணக்குகளில் இருந்து பதிவுகள் பரிந்துரைக்கப்படும், அது நமது செயல்பாட்டின் அடிப்படையில் செய்யப்படுகிறது. அதாவது நாம் முன்பே லைக் செய்த பதிவுகள், கருத்து தெரிவித்ததை அடுத்து அது நமக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இனி இந்த வகையில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் நமக்கு பரிந்துரைக்கப்படாது என்று இன்ஸ்டாகிராம் பிளாக் ஒன்றில் விளக்கம் அளித்துள்ளது. பயனாளர்கள் பலர் கேட்டுக்கொண்டதையடுத்து இந்த முடிவை இன்ஸ்டாகிராம் எடுத்துள்ளதாக கூறியுள்ளது.
என்றபோதிலும் அரசியல் சார்ந்த பக்கங்களை நாம் பின்தொடர்ந்தால் அந்த பதிவுகள் நமக்கு காட்டப்படும். அதே சமயத்தில் அரசியல் பதிவுகள் பரிந்துரைக்கப்படுவது பயனாளர்கள் விருப்பப்பட்டால் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழிமுறையை திரட்ஸ் தளமும் பின்பற்ற உள்ளது. விரைவில் பேஸ்புக்கிலும் இந்த வசதி கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.