தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 2024- 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான இட ஒதுக்கீடு குறித்த விவரங்களை தங்களது பள்ளி அறிவிப்பு பலகையில் இடம் பெற செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் சுய உதவி பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் எல்கேஜி முதல் ஒன்றாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை வரும் 22ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக rte.tnschools.gov.in என்ற இணையதள வழியாகவோ முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், ஒருங்கிணைந்த வட்டார வளமைய அலுவலகங்களிலோ கட்டணம் இன்றி விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்தான அறிவிப்பை அனைத்து தனியார் பள்ளிகளும் தங்களது பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் இடம் பெற செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.