வரும் டிசம்பர் 31ம் தேதி, 2:35 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக இன்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில், இன்டெல் நிறுவனத்தின் ஐந்தாம் சுற்று பணி நீக்க நடவடிக்கை இதுவாகும்.
இன்டெல் நிறுவனம், தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறையில் பணியாற்றும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. சாக்ரமெண்டோ கவுண்டியில் உள்ள பால்சம் அலுவலகத்தில் பணி செய்யும் ஊழியர்கள் நீக்கப்பட உள்ளதாக கூறியுள்ளது. செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக இந்த பணி நீக்கம் சொல்லப்பட்டுள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டிலும் பணி நீக்கங்கள் தொடரலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.