இன்டெல்சாட் 33 இ என்ற செயற்கைக்கோள், புவிசார் சுற்றுப்பாதையில் இருக்கும் பொது தனது எரிசக்தியை இழந்துவிட்டதால், ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா பசிபிக் பகுதிகளில் தகவல் தொடர்பு சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்டெல்சாட் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோளை மீட்டெடுக்க முடியாது என்றும், இதற்கு எந்தவித காப்பீடும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் சேவைகளை வேறு செயற்கைக்கோள்களுக்கு மாற்றும் பணியில் இன்டெல்சாட் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இன்டெல்சாட்-29e செயற்கைக்கோள் 2019 ஆம் ஆண்டு செயலிழந்ததை தொடர்ந்து, EpicNG தொடரில் இது இரண்டாவது தோல்வியாகும். மேலும், இன்டெல்சாட் 33e செயற்கைக்கோளின் ஆரம்ப செயல்பாட்டின் போது ஏற்பட்ட உந்துவிசை தொடர்பான பிரச்சனை, அதன் ஆயுட்காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 3.5 ஆண்டுகள் குறைத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.