கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு தீவிர மருத்துவ கண்காணிப்பு

December 16, 2023

கேரள மாநிலத்தில் கொரொனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக மருத்துவ கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் 200க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 12 மணி நேரத்தில் 280 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கேரள மாநில எல்லைகளை ஒட்டி இருக்கும் தமிழக பகுதிகளான கோவை,நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி கோவை,நீலகிரிக்கு வருபவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு […]

கேரள மாநிலத்தில் கொரொனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக மருத்துவ கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் 200க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 12 மணி நேரத்தில் 280 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கேரள மாநில எல்லைகளை ஒட்டி இருக்கும் தமிழக பகுதிகளான கோவை,நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி கோவை,நீலகிரிக்கு வருபவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சளி காய்ச்சல் போன்றவை இருந்தால் அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். மேலும் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிந்த பின்னரே அவர்கள் கோவைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதைப் போன்று நீலகிரி மாவட்டத்திலும் பரிசோதனைக்கு பின்னரே கேரளாவில் இருந்து வரும் மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu