தமிழ்நாட்டில் நகரங்கள் இடையே ஹெலிகாப்டர் சேவை விரைவில் வர உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள நகரங்கள் இடையே பயணம் செய்ய ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவதற்கான வழிமுறையை தமிழக அரசு உருவாக்கி வருகிறது. மாநிலம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்படாமல் உள்ள ஹெலிபேடுகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகமான டிட்கோ இதற்கான பரிந்துரையை உருவாக்கி உள்ளது. தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கை மத்திய அரசின் ஹெலிகாப்டர் கொள்கையை பயன்படுத்தி ஹெலிகாப்டர் சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தின் தொலைதூர பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் சேவை விரைவில் வழங்கப்படும்.