நேதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு

November 22, 2024

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரி யோவ் காலண்டுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அவர்கள், காசா மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருந்து விநியோகத்தை தடை செய்ததன் மூலம் போர் குற்றம் செய்து இருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. இது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தும், தற்போது குற்றங்கள் தொடர்ந்ததால் பொதுவில் வெளியிடப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான மேல்முறையிட்டை 3 நீதிபதிகள் நிராகரித்துள்ளார்கள். இதன் மூலம்,நேதன்யாகு மற்றும் காலண்ட் ஆகியோர் […]

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரி யோவ் காலண்டுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

அவர்கள், காசா மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருந்து விநியோகத்தை தடை செய்ததன் மூலம் போர் குற்றம் செய்து இருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. இது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தும், தற்போது குற்றங்கள் தொடர்ந்ததால் பொதுவில் வெளியிடப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான மேல்முறையிட்டை 3 நீதிபதிகள் நிராகரித்துள்ளார்கள். இதன் மூலம்,நேதன்யாகு மற்றும் காலண்ட் ஆகியோர் சர்வதேச அளவில் தேடப்பட்ட நபர்களாக அறிவிக்கப்படலாம். இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினர்கள் அல்லாததால், இந்த உத்தரவின் செயல்பாட்டை குறைக்க வாய்ப்புள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu