அந்தமான் நிக்கோபாரின் தலைநகரம் ‘ஸ்ரீ விஜயபுரம்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்தமான் நிக்கோபாரின் தலைநகரமான போர்ட் பிளேரின் பெயர் ‘ஸ்ரீ விஜயபுரம்’ என மத்திய அரசு மாற்றியுள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதாவது, “இது சோழப் பேரரசின் கடற்படை தளமாக இருந்ததாகும். இந்நாட்டின் வளர்ச்சிக்கு இது முக்கியமான இடமாகும்.” இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு முக்கிய இடம் உண்டு என்பதையும் அவர் குறிப்பிட்டார்.