சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் சிங்கார சென்னை பயண அட்டை அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் சேவையை நாள்தோறும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகிறார்கள். மெட்ரோவில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்து புதுப்புது திட்டங்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் ஒரே அட்டையை பயன்படுத்தி பயணம் செய்யும் வகையிலான 'சிங்கார சென்னை அட்டை' என்ற தேசிய பொது இயக்க அட்டையை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் நேற்று அறிமுகப்படுத்தியது.
மெட்ரோ ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'இந்த புதிய பயண அட்டையை இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும், அதாவது ரூபே தேசிய பொது இயக்க அட்டைகளை ஏற்கும் அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் பயன்படுத்த முடியும். மேலும் இந்த அட்டை பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்' என்றனர்