வாட்ஸ்அப் மோசடி அழைப்புகளை அடையாளம் காணும் தொழில்நுட்பம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் வாட்ஸ்அப் மெசேஞ்சரை மாதந்தோறும் 50 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப்பில் அதிகரித்து வரும் மோசடி செயல்களை தடுக்கும் நோக்கத்தில் மெட்டா நிறுவனத்துடன் ட்ரூகாலர் இணைந்துள்ளது. இதன் மூலம் ஸ்பேம் அழைப்பு மற்றும் மெசேஜை பயனர்கள் எளிதில் அடையாளம் கண்டு, பிளாக் (Block) செய்யலாம். இப்போதைக்கு இது பீட்டா பயனர்களின் பயன்பாட்டுக்கு மட்டுமே கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் உலகம் முழுவதும் இது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ட்ரூகாலர் தலைமை நிர்வாக அதிகாரி ஆலன் மாமெதி உறுதி செய்துள்ளார்.